தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தொடர்பில் கடந்த 13 ஆம் திகதி கட்சியின் மத்திய குழு கூடி எடுத்த தீர்மானத்தை இன்றையதினம் பதிவு தபாலில் அனுப்பி வைப்போம். அதை படித்து விட்டு மணிவண்ணன் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், மேலதிகமாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்“ என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று (15.08.2020)முள்ளிவாய்க்கால் நினைவு திடலில் அஞ்சலி செலுத்தி பாராளுமன்ற அரசியலை ஆரம்பிப்பதற்க்கான சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறே தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அவர் ,
13 ஆம் திகதி இரவு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூடி ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. விசேடமாக மணிவண்ணன் தொடர்பாக பேசி சில முடிவுகள் எடுக்கப்பட்டன.
அந்த முடிவுகளை நாங்கள் நேற்று இரவு எழுத்துமூலமாக மணிவண்ணனிற்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டது. அந்த அறிவித்தல் பதிவு தபாலில் இன்று அனுப்பி வைக்கப்படும்.
அவர் அதை படித்து விட்டு தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், மேலதிகமாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்“ என்றார்.