Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நல்லூர் கந்தனின் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது!

நல்லூர் கந்தனின் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது!

1 minutes read

நல்லூர் கந்தனின் தீர்த்தோற்சவம்  இன்று( செவ்வாய்க்கிழமை) காலை  சிறப்பாக நடைபெற்றது.

விநாயகர், வள்ளி தேவசேனா சமேத வேற்பெருமான், சண்டிகேஸ்வரர் சண்முக புஷ்கரணிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினர்.

திருக்குளத்தின் எட்டு திசையிலும் அஷ்ட திக்பாலகர் திருவுருவங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டன.

மத்தியில் முருகவேளின் அஸ்திர ராஜருக்கு அபிஷேக ஆராதனை நிகழ்ந்து தீர்த்தவாரி கண்டருளச்செய்யப்பெற்றது. நல்லூர் தேவஸ்தானத்தார் இந்நிகழ்வு பக்தர்களின் நலன் கருதி நேரலையாக ஒளிபரப்பப்பட்டமை சிறப்பம்சமாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More