Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை இன்று

கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை இன்று

1 minutes read

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை இன்று (செவ்வாய்க்கிழமை)  ஆரம்பமாகவுள்ளது

குறித்த பரிசோதனை புனேவில் உள்ள பாரதி வித்யாபீட் மருத்துவக் கல்லூரியில் சீரம் நிறுவனத்தினால் நடத்தப்படவுள்ளது

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீரம் நிறுவனம் “நாட்டு மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசியை வழங்கி இந்தியாவை தற்சார்பு கொண்டதாய் உருவாக்குவோம்”  எனக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 59 ஆயிரத்து 696 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 854 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 31 இலட்சத்து 61 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது.

அத்துடன் 24 இலட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More