Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கஜேந்திரகுமாரின் சர்ச்சைக்குள்ளான வீட்டின் வரைபடம் | நடப்பதென்ன?

கஜேந்திரகுமாரின் சர்ச்சைக்குள்ளான வீட்டின் வரைபடம் | நடப்பதென்ன?

1 minutes read
No photo description available.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமைத்து வரும் வீட்டில் தொழிலாளி ஒருவர் மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டின் வரை படம் தற்போது வெளியாகியுள்ளது. மிக பிரமாண்டமாக கட்டப்படும் இந்த வீடு ராஜ மாளிகை போல அமையவுள்ளதாக கூறப்படுகின்றது.

நல்லூர் குறுக்குத் தெருவில் இந்தச் சம்பவம் நேற்றிரவு11 மணியளவில் இடம்பெற்றது. காலியைச் சேர்ந்த இந்துனில் (வயது -38) என்ற தொழிலாளியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக அமைத்து வரும் வீட்டில் கூரை வேலையில் ஈடுபட காலியிலிருந்து அழைத்துவரப் பட்டவர்களில் ஒருவர், நேற்றிரவு 11 மணியளவில் மேல் தளத்துக்குச் சென்றுள்ளார்.

எனினும் அவர் மதுபோதையில் இருந்தமையால் தடுமாறி வீழ்ந்துள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.

இறப்பு விசாரணை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இன்றிரவு இடம்பெற்றது. சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த தொழிலாளியின் மரணத்துடன் மிகப் பெரும் செலவில் கட்டப்படும் இந்த வீடு குறித்து சமூக வலைத்தளவாசிகள் பல்வேறு விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More