கிழக்கு தொல்பொருள் செயலணிக்கு தமிழ் புத்திஜீவிகள் இணையத் தயாரில்லை என கூறப்பட்ட நிலையில் தாம் இணைந்து செயற்பட தயராக இருப்பதாக மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு தொல்பொருள் செயலணிக்கு தமிழ் புத்திஜீவிகள்
தொல்பொருளியல் துறையை நான் சாராதவனாக இருந்த போதிலும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் தொல்பொருளியல் துறை சாராத மகப்பேற்றியல் நிபுணர் கபில குணவர்தன உட்பட பலர் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில் சமுதாய மருத்துவ நிபுணராக கடமையாற்றிவரும் எனக்கு ஒரு துறை சார் நிபுணராக செயலணியில் கடமையாற்ற முழுமையான தகுதி இருக்கிறது. இதை விட நான் கட்சி அரசியலுக்கு அப்பால் பட்டவன் என்பதையும் 2015 யாழ் மருத்துவச் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் வட மாகாண சபையினால் மறைக்கப்பட்ட சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்து மாசடைந்த உண்மைகளை அம்பலப் படுத்தியவன் என்பதையும் அப்போது இது தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த அமைச்சர் நன்றாக அறிவார்.
மேலும் நான் கிழக்கை சாராதவனாக இருப்பதானால் நல முரண்பாடுகளுக்கு அப்பால் இந்த விடயத்தில் நடுநிலையாக சிந்திக்க முடியும். நான் தொடர்ச்சியாக மருத்துவத்துக்கும் அப்பாலும் ஆய்வுகளை மேற்கொண்டுவருவதும் கிழக்கில் கூட கடந்தகாலத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு துறைசார் நிபுணராக கல்குடாவில் மதுபானசாலை இயங்குவதற்கு போதுமான நீர்வளம் அங்கு காணப்படவில்லை என்று தெரிவித்து இருந்ததையும் அனைவரும் அறிவர். இந்தப் பின்புலத்தில் அமைச்சரின் சாதகமான முடிவையும் நியமனக் கடிதத்தையும் விரைவில் எதிர்பார்க்கிறேன்
நன்றி
Dr முரளி வல்லிபுரநாதன்
MBBS (Jaffna), PGD (Population Studies), MSc (Community Medicine), MD (Community Medicine), FCCP (Sri Lanka), FRSPH (UK)
சான்றளிக்கப்பட்ட சமுதாய மருத்துவ நிபுணர்
வருகை நிலை விரிவுரையாளர், யாழ் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்கள்