காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்கத் தாலிக்கொடியை திருடன் ஒருவன் கத்தியை காட்டி பறித்து தப்பிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று(12) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஆரையம்பதி பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தமது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அதிகாலை 4 மணியளவில் படுக்கையறைக்குள் நுழைந்த திருடன் குறித்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து அவரின் தாலியை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளார்.
சுமார் 11 பவுண் எடையுள்ள குறித்த தாலியின் பெறுமதி 11 இலட்சம் ரூபா விற்கும் அதிகமென குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.