Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திலீபனை நினைவு கூர்வது பயங்கரவாத குற்றம் | யாழ் நீதிமன்றம்

திலீபனை நினைவு கூர்வது பயங்கரவாத குற்றம் | யாழ் நீதிமன்றம்

1 minutes read

விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் எனவே திலீபனை நினைவு கூர்வது அந்த அமைப்பொன்றின் உறுப்பினரை நினைவு கூர்வதாக அமையும் என யாழ் நீதிமன்ற நீதவான் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நினைவு கூர்ந்தால் அது, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக்கூடிய குற்றம் என்றும் யாழ் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் தீர்ப்பளித்துள்ளார்.

திலீபனின் நினைவேந்தலிற்கு தடைகோரி யாழ் பொலிஸ் நிலைய பொலிசார் தாக்கல் செய்த மனுவை ஏற்று, நினைவேந்தலிற்கு யாழ் நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில் இன்று திருத்த மனு சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், வ.பார்த்தீபன் உள்ளிட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சார்பில் சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், கு.குருபரன் ஆகியோர் முன்னிலையாகினர்.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரை நினைவு கூர்வதை நீதிமன்று தடை செய்கிறது என நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More