Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விக்னேஸ்வரன் – டெனிஸ்வரன் வழக்கு முடிவிற்கு வந்தது!

விக்னேஸ்வரன் – டெனிஸ்வரன் வழக்கு முடிவிற்கு வந்தது!

1 minutes read

வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு   சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்   நாடாளுமன்ற உறுப்பினருமான  சி.வி.விக்கினேஸ்வரன், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறியும் அதற்கு மன்னிப்புக்கோர வேண்டுமெனவும் மேலும் வழக்கிற்காக தாங்கள் செலவழித்த தொகையை திருப்பி செலுத்த வேண்டுமெனவும்  வடமாகாண முன்னாள் அமைச்சர் ப.டெனீஸ்வரன் தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், விக்கினேஸ்வரனுக்கு எதிரான வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, டெனீஸ்வரன் சார்பில் ஆஜரான சட்டத்திரணி சில நிபந்தனைகளை முன்வைத்து வழக்கை வாபஸ் பெற தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

விக்கினேஸ்வரன் தலைமையில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் குறித்த நிபந்தனைகளை நிராகரித்ததுடன் தொடர்ந்தும் வழக்கை முன்னெடுக்கப் போவதாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த வழக்கு இன்றையதினம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நிபந்தனைகள் எதுவும் இன்றி வழக்கை வாபஸ்பெற டெனீஸ்வரன்  சார்பில் ஆஜரான சட்டத்தரணி இணக்கம் தெரிவித்தார்.

தொடர்ந்து இருதரப்பினரும் வழக்கை சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவர ஏற்றுக்கொண்டனர்.இந்நிலையில் குறித்த வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More