Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஹெரோயினுடன் 45 வயது பெண் கைது

ஹெரோயினுடன் 45 வயது பெண் கைது

1 minutes read
 ஹெரோயினுடன் 45 வயது பெண் கைது

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேனியடி பிரதேசத்தில் பெண் ஒருவரிடம் இருந்து 600 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினை தன்வசம் வைத்திருந்த 45 வயது பெண்ணையும் கைது செய்ததாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 55,000 ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் போதைப் பொருள் விற்பனையாளராக அடையாளங் காணப்பட்டதை அடுத்து, குறித்த பெண்ணின் கேனியடி பிரதேச வீட்டை சோதனை நடத்தியதுடன் சந்தேக நபரையும் சோதனை செய்ததில் 600 மில்லி கிராம் கொண்ட 10 பக்கெட்டுகளையும் கைப்பற்றியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் கைது செய்யப்பட்ட பெண்ணையும் திருகோணமலை பதில் நிதவான் முன்னிலையில் இன்று (19) ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More