வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த பதிவு நடவடிக்கை கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இவ்வாறான செயற்பாடுகளால் ஆலயத்திற்கு வருகைதரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதுடன், பொதுமக்கள் அச்ச மனநிலையுடன் வழிபாடுகளில் ஈடுபட வேண்டியுள்ளதாக நிர்வாகத்தினர் விசனம் தெரிவிக்கின்றனர்.
வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவிழா நிகழ்வினை நடத்துவதற்கு நெடுங்கேணி பொலிஸாரால் தடை கோரப்பட்ட நிலையில் அதனை வவுனியா நீதவான் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டிருந்தது.
எனினும், பொலிஸார் ஒலிபெருக்கி பாவனைக்கு அனுமதி வழங்காத நிலையில் தற்போது மக்களை அச்சுறுத்தும் வகையில் பதிவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றதாக கூறப்படுகிறது.