நாளை (26) இரவு 8 மணி முதல் கொழும்பில் பல பகுதிகளுக்கு நீர் வழங்கல் 10 மணி நேரம் இடை நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (27) காலை 6 மணி வரை கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் எனவும், கொழும்பு 11 க்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோக அமைப்பின் அத்தியாவசிய மேம்படுத்தல் பணி காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.