இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினர் அங்கொட லொக்காவின் தாய் மற்றும் சகோதரி இன்று (26) மேல் மாகாண தெற்கு குற்றவியல் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, அங்கொட லொக்கா ஹெரோயின் வர்த்தகத்தின் மூலம் மற்றும் கப்பம் பெற்றதின் மூலம் ஈட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் 11 காணிகள் தொடர்பிலும் மற்றும் சகோதரியின் பெயரில் உள்ள மூன்று காணிகள் தொடர்பிலும் சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அதேபோல், அங்கொட லொக்காவின் கள்ளக்காதலியான தற்போது வௌிநாட்டில் வசித்து வரும் பெண்ணின் பெயரில் உள்ள சொத்துக்கள் தொடர்பிலும் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.