Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் வாள்வெட்டு | தாய், மகன் படுகாயம்

யாழில் வாள்வெட்டு | தாய், மகன் படுகாயம்

2 minutes read

யாழ்ப்பாணம் – நீர்வேலி சந்திக்கு அண்மையில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் இளைஞன் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.

அத்தோடு, மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வன்முறைச் சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பு.சிவா (வயது -30) அவரது தாயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அடங்கிய கும்பலே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வன்முறைக் கும்பல் வாள்கள், கம்பிகள் கொண்டே தாக்குதலை நடத்தியுள்ளது. மேலும் வீட்டிலிருந்த பெறுமதியான பொருற்களை அடித்துச் சேதப்படுத்தியும் தீயிட்டு எரித்த வன்முறைக் கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More