Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மீண்டும் கொரோனா | பரீட்சைகள் திணைக்களம் விடுத்த முக்கிய அறிவிப்பு

மீண்டும் கொரோனா | பரீட்சைகள் திணைக்களம் விடுத்த முக்கிய அறிவிப்பு

1 minutes read

இலங்கையில் மீண்டும் கொரோனா நோயாளிகள் சமூக மட்டத்தில் இனங்காணப்பட்டமையை அடுத்து சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டதோடு பாடசாலைகளும் மூடப்பட்டன.

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்பட்ட போதும், திட்டமிட்டபடி சகல பரீட்சைகளும் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை எதிர்வரும் 12ம் திகதியிலிருந்து அடுத்த மாதம் 6ம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், குறித்த பரீட்சைகள் 2,648 நிலையங்களில் இடம்பெறவுள்ளது.

2,77,580 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 85,244 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 11ம் திகதி நடைபெறவுள்ளது. 2,936 நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு 3,31,694 பேர் தோற்றவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More