வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 5 பெண்களை போதைத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக போதைத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை நேற்று (திங்கட்கிழமை) மேற்கொண்டுள்ளனர்.
இதன்போதே பழைய பேருந்து நிலையப்பகுதியில், விபசாரத்தில் ஈடுபட முயற்சித்த குற்றச்சாட்டில் 5 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் குருநாகல், முல்லைத்தீவு, நெடுங்கேணி, விஸ்வமடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பெண்களை நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.