Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தற்போது காணப்படும் வைரஸ் வேகமாகப் பரவக் கூடியது | சுகாதார அமைச்சு

தற்போது காணப்படும் வைரஸ் வேகமாகப் பரவக் கூடியது | சுகாதார அமைச்சு

1 minutes read
சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளராக வைத்தியர் ஜயருவான் பண்டார. –  Ceylonmirror.net

நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் ஏனையவர்களுக்கு இலகுவில் தொற்றக்கூடிய தன்மையைக் கொண்டது என சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய வைரஸினை ஆராய்ந்துள்ள விசேட நிபுணர்கள் இந்த வைரஸ் மிக அதிகளவான பரவும் தன்மை கொண்டது என எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை முறியடித்து வைரஸினை உருவாக்ககூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மக்களை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More