கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டத்தை மீறிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டத்தை மீறிய 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரிதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறக்க தடை விதிப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் விற்பனை நிலையங்களை திறப்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.