யாழ்ப்பாணம் – விடத்தல்பளை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த 117 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
குறித்த 117 பேரும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கடந்த 45 நாட்களாக அங்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் இன்று (புதன்கிழமை) காலை அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என எமது பிராந்திய செய்தியார் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, அநுராதபுரம், மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் இதுவரை தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 52 ஆயிரத்து 612 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதனைடுத்து, நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 9 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில், 9 ஆயிரத்து 703 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.