Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாகந்துரே மதூஸ் CCD யில்

மாகந்துரே மதூஸ் CCD யில்

1 minutes read
மாகந்துரே மதூஸ் CCD யில்...

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினராக கருதப்படும் மாகந்துரே மதூஸ் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றவியல் பிரிவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி அந்நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதன்போது, அவர் கட்டுநாயக்கவில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் காவலில் எடுக்கப்பட்டார்.

மாகந்துரே மதூஸ் கொலை சம்பவங்கள் மற்றும் 50 க்கும் அதிகமான கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவராவார்.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More