குருநாகல் – குளியாப்பிட்டியில் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் நான்கு கிராமங்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கயியால, ஊருபிடிய, என்னருவ மற்றும் பல்லேவல ஆகிய நான்கு கிராமங்களுக்கே இவ்வாறு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டியில் அமைந்துள்ள தேவஸ்தானம் ஒன்றில் கடந்த 2ஆம் திகதி திருமண நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, மணமகனுக்கு கடந்த 12ஆம் திகதி வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குறித்த திருமண நிகழ்வில் பங்கேற்ற மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் 11 பேருக்கு நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குருநாகல் – குளியாப்பிட்டியில் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் நான்கு கிராமங்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கயியால, ஊருபிடிய, என்னருவ மற்றும் பல்லேவல ஆகிய நான்கு கிராமங்களுக்கே இவ்வாறு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டியில் அமைந்துள்ள தேவஸ்தானம் ஒன்றில் கடந்த 2ஆம் திகதி திருமண நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, மணமகனுக்கு கடந்த 12ஆம் திகதி வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குறித்த திருமண நிகழ்வில் பங்கேற்ற மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் 11 பேருக்கு நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் 11 பேருக்கு நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.