Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை களுத்துறையில் 166பேருக்கு கொரோனா வைரஸ் ​தொற்று!

களுத்துறையில் 166பேருக்கு கொரோனா வைரஸ் ​தொற்று!

1 minutes read

களுத்துறை மாவட்டத்தில் இதுவரை 166 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சமன் கீகனகே இதனைத் தெரிவித்துள்ளார்.  ​

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் அதிகமானோர், மத்துகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 130 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,933 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 92 பேர் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 7,872 பேரில் 9,323 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More