0
2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட் சைக்கான வெட்டுப்புள்ளிகள், இணையத்தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதேவேளை இம்முறை 41ஆயிரத்து 500பேர் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
மருத்துவபீடம், பொறியியல் பீடம் உள்ளிட்ட சில துறைகளுக்கு இம்முறை அதிக மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.