அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் வருகைக்கும் எம்.சி.சி ஒப்பந்தத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
மேலும் எம்.சி.சி ஒப்பந்தம் தேசிய பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால், எக்காரணிகளுக்காகவும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் வெளிவிவகார பொது கொள்கையினையை கடைப்பிடுக்கும் என தெரிவித்த செஹான் சேமசிங்க, எனினும் எத்தத் தரப்பினருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படமாட்டாது என தெரிவித்தார்.
ஆசிய நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.