நாட்டின் 64 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 46 பேர் கைது செய்யிப்பட்டுள்ளனர்.
அத்தோடு 7 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதற்கமைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் ஆயிரத்து 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 162 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.