Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிங்கள கும்பல்களால் எரித்த தோட்டங்களிலிருந்து வந்த தமிழனின் கதையாம் | 800 பட எழுத்தாளர்

சிங்கள கும்பல்களால் எரித்த தோட்டங்களிலிருந்து வந்த தமிழனின் கதையாம் | 800 பட எழுத்தாளர்

2 minutes read
india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முத்தையா முரளிதரனின் படத்திலிருந்து விஜய்சேதுபதி தயாரிப்பாளரால் வெளியேற்றப்படவில்லை, மக்களின் கூச்சலால்தான் அவர் வெளியேறினார் என்று 800 படத்தின் எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா கூறியுள்ளார்.

image

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறான ”800” படத்தின் எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகா, திரைப்படத்தை உருவாக்குபவர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கவேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். “ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுவதற்கு முன்பு அதைக் கண்டிக்க வேண்டாம். இலங்கையின் மிகவும் சுவாரஸ்யமான நபர்களில் ஒருவரை ஆராய்வதற்கான வாய்ப்பை படைப்பாளர்களுக்கு மறுக்க வேண்டாம். ரத்துசெய்யும் கலாச்சாரத்தை மேற்கிலிருந்து இங்கும் உருவாக்கவேண்டாம் ”என்று அவர் தனது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.

தனது வலைப்பதிவில் படம் என்னவாக இருக்கும் என்பது குறித்த குறிப்புகளையும் அவர் வெளிப்படுத்தினார், மேலும் இந்த படத்தில் முத்தையா வேடத்தில் நடிக்கவிருந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு தனது வலைப்பதிவு ஒரு திறந்த கடிதமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி குறித்து பேசிய ஷெஹன்  “படத்தின் தயாரிப்பாளரால் அவர் படத்திலிருந்து வெளியேற்றப்படவில்லை, மக்களின் கூச்சலால்தான் அவர் வெளியேறினார்” என கூறியுள்ளார்.

“முரளிதரன் ஒரு கண்கவரும் மனிதர் மற்றும் இது ஒரு மயக்கும், மேலும் இப்படத்தின் கதாநாயகனுக்கு இது “வாழ்நாளின் சிறந்த கதாபாத்திரமாக இருக்கும்” என்றும் அவர் கூறினார். “ஸ்ரீபதியும் (இயக்குனரும்) ஒரு சிறந்த பந்து வீச்சாளரின் வீரக் கதையைச் சொல்வதில் ஒருபோதும் ஆர்வம் காட்டவில்லை. சிங்கள கும்பல்களால் குடும்ப தொழிலை எரித்த தோட்டங்களில் இருந்து ஒரு தமிழ் சிறுவன் எப்படி விளையாட முடிந்தது? இயன் போத்தம், ரிச்சர்ட் ஹாட்லீ, கபில் தேவ் மற்றும் ஷேன் வார்ன்க்கு இணையாக எப்படி உருவாக முடிந்தது. பந்துவீச்சில் கவனம் செலுத்துவதற்கும் அரசியலைத் தவிர்ப்பதற்கும் அவர் எடுத்த முடிவு  புத்திசாலித்தனமானதா அல்லது கடினமானதா?” என்பதைப்பற்றியும் அலசியுள்ளோம்

விஜய் சேதுபதி இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதற்கான சலசலப்பை சுட்டிகாட்டியுள்ள எழுத்தாளர், இது நாட்டில் தற்போதைய கருத்து சுதந்திரத்தின் அளவை எடுத்துக்காட்டுகிறது. “நடிகர்கள் சர்ச்சைக்குரிய நபர்களையோ அல்லது வில்லன்களின் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்று கூறி யார் விதிகளை உருவாக்கினார்கள்? எல்.டி.டி.ஈ.யை விட அதிகமான மரணங்களுக்கு காரணமான சர்ச்சிலைப் பற்றிய ஒரு திரைப்படத்திற்கு அவர்கள் ஆஸ்கார் விருது வழங்கியபோது சலசலப்பு ஏற்பட்டதா?”என்றும் ஷெஹன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த படம் முரளிதரனின் அரசியல் வாழ்க்கையை கையாளவில்லை, நான் எழுதிய படம் 2010 இல் முரளி தனது 800 வது விக்கெட்டை எடுத்தபோது முடிவடைகிறது. 2019 ஆம் ஆண்டில் அவர் எந்த அரசியல்வாதிகளுடன் மேடைகளைப் பகிர்ந்து கொள்கிறார் என்பது 800 ஸ்கிரிப்ட்டில் கையாளப்பட்ட தலைப்பு அல்ல. ஆனால் முரளிதரன், தனது அறக்கட்டளை பணிக்காக புலிகளின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து, போரைப் பற்றி ஒரு சூடான கலந்துரையாடலைக் கொண்ட ஒரு முக்கியமான காட்சி உள்ளது. அந்த காட்சியில் என்ன நடக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்ல மாட்டேன், ஏனென்றால் அது உண்மையில் ஒரு டிரெய்லராக இருக்கும். ஆனால் நாங்கள் இப்படத்தை தயாரிப்போம், நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம், ”என்று அவர் ஒரு சஸ்பென்ஸ் குறிப்பில் முடித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More