நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 32 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,075 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 8,413 பேரில் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 4776 ஆக காணப்படுகின்றது.
அத்தோடு 445 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளத்துடன் கொரோனா தொற்றினால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.5Shares