Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மின்சாரம் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய் பலி

மின்சாரம் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய் பலி

1 minutes read

அக்கரபத்தனை பகுதியில் மிருகங்களுக்காக பொருத்தப்பட்ட சட்ட விரோத மின்சாரத்தில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபமான முறையில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்ராசி நிவ் போட்மோர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் உயிழந்தவர் காளி கிட்னம்மாள் 65 வயது நான்கு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த தாய் பூஜைக்காக வாழையிலை வெட்டுவதற்காக குறித்த தோட்டத்திற்கு சென்றுள்ளார் நீண்ட நேரம் வராததால் வீட்டில் உள்ளவர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது குறித்த தாய் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

அதனை தொடந்து பொலிஸாருக்கு தெரிவித்ததனையடுத்து பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன.

குறித்த தாயின் சடலம் நுவரெலியா நீதவானின் மேற்பார்வையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரபத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More