கொழும்பு சிறைச்சாலையில் மேலும் 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 கைதிகளுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கைதிகளின் மொத்த எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள், தமது உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வௌியேற 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகும் கைதிகள், கந்தக்காடு அல்லது கல்லேல்ல சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளாகும் பெண் கைதிகள் வெலிக்கந்தை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.
இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகிய அனைத்து கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை, பல்லன்சேன மற்றும் போகம்பறை சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.