கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை(24) முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியில் நாட்டில் இன்று பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் மீண்டும் பாடசாலை மூடப்படுகின்ற செய்தி கல்வி சமூகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று கண்டறியப்பட்ட நிலையில் சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு அமையயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கொரோனா அச்சம் காரணமாக இன்றைய தினம் கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலயத்தில் 13 மாணவர்கள் மாத்திரம் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய பாடசாலையில் சுமார் 40 தொடக்கம் 30 வீதமான மாணவர்களின் வரவு பதிவாகியிருந்ததாக வலயக் கல்வி அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.