கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 72 வயதான நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பாரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த நபரின் வீடு மற்றும் அவர் பணிபுரிந்த தொண்டமான் நகர்ப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நாளை முதல் ஒரு வாரத்துக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகைளையும் மூட வட மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, கிளிநொச்சியில் தொற்று கண்டறியப்பட்டவர், நாட்டில் ஏற்பட்ட கொத்தணிகளுடன் தொடர்பற்றவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என சுகாதாரத் தரப்பு எச்சரித்துள்ளது.