நாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் சியம்பலாபே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரும் அதலுகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரும் இவ்வாறு வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது.