தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் பிரிவில் கிரிமன்துடாவ கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, சில பிரதேசங்களில் உள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி பண்டாரகம பொலிஸ் பிரிவில் உள்ள, அடலுகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, எபிடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கொலமெதிரிய கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கண்டி மாவட்டத்திலுள்ள அலவதுகொட பொலிஸ் பிரிவு (அக்குரன பிரதேச செயலகப் பிரிவு), புளகஹதென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் தெலம்புகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பன இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.