தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனுக்கு முகநூல் ஊடாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மாலை சித்தாண்டி, செங்கலடி, வந்தாறுமுலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 07 பேர் இந்நடவடிக்கையின் போது ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் அணியை சேர்ந்த முக்கிய உறுப்பினர் உட்பட ஏழு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் குறித்த நபர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ள மட்டக்களப்பு மாவட்டநாடாளுமன்ற, உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் மட்டக்களப்பு மாநகர மேயர் சரவணபவன் இது தொடர்பில் பொலிஸாருடன் கலந்துரையாடிவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.