Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஸ்ரீலங்கா இரண்டாகும் | சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

ஸ்ரீலங்கா இரண்டாகும் | சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

1 minutes read

இறுதிப்போரில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களை நினைவு கூர்வதற்கு தமிழ் மக்களுக்கு இடமளிக்காவிட்டால் ஸ்ரீலங்கா இரண்டாகப் பிளவடைவதை எவராலும் தடுக்க முடியாமற் போய்விடும் என மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், அவர்களை அஞ்சலிப்பதை நீதிமன்றத்தினால் தடுக்க முடியாது என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியது. அதில் உரையாற்றிய சட்டத்தரணி நாமல் ராஜபக்ச, இறுதிப்போரில் கொல்லப்பட்ட உறவுகளை அஞ்சலிக்க வடக்கு, கிழக்கு மக்களுக்கு நீதிமன்றம் தடைவிதித்தாலும், அவர்களுக்கான உரிமையை வழங்க மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் முன்னிலையாகவுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையில் ஜே.வி.பியினரால் வீரர்களின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கிலும் மாவீரர் என்ற அனுஸ்டானம் உள்ளது. அதில் விடுதலைப்புலிகளின் தினம் என்று கூறுவதை விடவும், போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்கின்றனர்.

2009ஆம் ஆண்டு போர் முடிந்த போது சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு காணப்படுகின்றது. தங்களது உறவுகளை நினைவு கூர்வதற்கு அங்குள்ள பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் உரிமையிருக்கின்றது. அதற்காக நாங்கள் ஆதரவளிக்கின்றோம்.

அதற்காக எங்கள் மீது விடுதலைப்புலிகளின் முத்திரை பொறித்தாலும் பிரச்சினையில்லை. அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதை நீதிமன்றத்தினால் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தாலும் எங்கேயாவது ஓரிடத்தில் அவர்கள் தங்களது உறவுகளை அஞ்சலிப்பார்கள்.

ஸ்ரீலங்காவுக்கு இருக்கின்ற மிகப்பெரிய குற்றச்சாட்டுக்களில் போர்க்குற்றச்சாட்டும் உள்ளது. விடுதலைப் புலிகளை மறந்துவிடுவோம், ஆயிரக்கணக்கான தாய், தந்தையர், பிள்ளைகள், சகோதரர்களுக்கு அவர்களது உறவுகளை அஞ்சலிக்க அனுமதி வழங்க வேண்டும்.

தென்னிலங்கையில் வீரர்களை அஞ்சலிக்க இடமளிப்பதுடன், வடக்கில் இவ்வாறு இனவாதமாக செயற்படுவதால் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா இரண்டாகப் பிளவடைவதை தடுக்க முடியாமற் போய்விடும் எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More