கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டுக்கு வருகைதர முடியாமல் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 277 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 76 பேரும் அபுதாபியில் இருந்து 42 பேரும் தோஹா கட்டாரில் இருந்து 96 பேரும் மற்றும் இந்தியாவில் இருந்து 53 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் 5 விசேட விமானங்கள் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.