இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 430 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 656 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 501 ஆக காணப்படுகின்றது.
இதில் 5 ஆயிரத்து 738 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 531பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.