நீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் மோதல் ஏற்பட்ட நிலையில் கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு சடலங்கள் ராகம வைத்தியசாலையால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த மோதில் காயமடைந்த 24 பேர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த மோதலின்போது சிறைச்சாலையினுள் ஒரு தரப்பினர் தீவைத்த நிலையில் ஆறு தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த மோதல் சம்பவத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை செய்வதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.