0
நீர்கொழும்பு மஹர சிறையில் இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பான விசாரணைக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹர சிறையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஐந்து கைதிகள் ராகம வைத்தியசாலையி்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மஹர சிறைச்சாலையில் மோதலால் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.