பருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி விளையாட்டாக தனது சகோதரனின் கழுத்துப் பட்டியை யன்னல் கம்பியில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளதாக திடீர் இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை- புலோலி,சாரையடியைச் சேர்ந்த ஹம்சி சிறீதரன் (வயது-9) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத போது தனிமையில் இருந்த மாணவி சகோதரனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில் காணப்பட்ட யன்னல் பிணைச்சலில் கட்டி கழுத்தில் சுருக்கிட்டுள்ளார்.
இதன்போது சுருக்கு இறுகி மாணவி உயிரிழந்துள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் கழுத்தில் பட்டி இறுகிக்கொண்டதன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.