திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூரைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரொருவர் மாவீரர் தினமன்று மாவீரர் தின பாடலை தனது முகநூலில் பதிவிட்டமைக்காக சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிறுத்தப்பட்டதையடுத்து குறித்த நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கமாக உள்ள நிலையில் குறித்த இளைஞர் மாவீரர் பாடலை முகநூலில் பதிவிட்டமைக்காக கடந்த 27ஆம் திகதி சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் குறித்த சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிறுத்தியபோதே இவ்விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.