Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அனர்த்தத்திற்கு முகம்கொடுக்க அனைத்து வழிகளிலும் தயார் செய்யப்படும் வவுனியா!

அனர்த்தத்திற்கு முகம்கொடுக்க அனைத்து வழிகளிலும் தயார் செய்யப்படும் வவுனியா!

1 minutes read

புரவி புயலானது வடக்கு கிழக்கை அதிகளவில் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வவுனியா மாவட்டத்தினை தயார் நிலையில் வைத்திருப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலக ரீதியாக கிராம சேவகர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அதற்கான தயார் படுத்தலில் ஈடுபடுமாறு பிரதேச செயலாளர்கள் பணித்துள்ளனர்.

இந்நிலையில் வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் கருத்து தெரிவிக்கையில்,

கிராம சேவகர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக கிராம மட்டத்தில் அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்களுக்கான அறிவித்தல்கள் அந்தந்த பகுதி வணக்கஸ்தலங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருவதுடன் பாடசாலைகள் மற்றும் வணக்கஸ்தலங்களில் தேவையேற்படும் பட்சத்தில் மக்களை தங்க வைப்பதற்கும் அவர்களுக்கான உணவு வசதிகளை ஏற்படுத்தவும் தயார்ப்படுத்தல்கள் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை, மின்சார சபையினர் மற்றும் மரங்கள் விழும் பட்சத்தில் அவற்றினை உடன் அகற்றுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் வவுனியாவில் அனர்த்தத்திற்கு முகம் கொடுக்கும் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது“ எனவும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More