Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் தொடரும் இளவயது தற்கொலைகள்! காரணம் என்ன?

கிளிநொச்சியில் தொடரும் இளவயது தற்கொலைகள்! காரணம் என்ன?

1 minutes read

அண்மைய காலத்தில் கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இளையவர்களின் தற்கொலைகள் சமூகத்தை பெரிதும் உலுக்கி வருகின்றது.

இந்த நிலையில் கிளிநொச்சி – பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று பாடசாலைக்குச் சென்று விட்டு வந்த பின்னர் வீட்டில் வைத்து தாயின் சேலையில் அவர் தூக்கிட்டு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரமந்தனாறு 71ஆம் வாய்க்காலைச் சேர்ந்த பத்மநாதன் அகவிழி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்திருந்தார். அடுத்தடுத்து நடக்கும் இத்தகைய தற்கொலைகளுக்கான காரணங்கள் என்ன? எப்படியான இளைய சமூதாயம் உருவாகிறது என்பதே பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More