Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு

இலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு

1 minutes read

இலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இருந்தபோதிலும் எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்கு கடுங்காற்று மற்றும் மழை வீழ்ச்சி பதிவாகுமெனவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புரவி சூறாவளியானது இலங்கையின் வடகிழக்கு கரையில் குச்சவெளிக்கும் திரியாயிக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்றிரவு ஊடறுத்து சென்று உள்ளே மையம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த காற்று வீசுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமெனவும் கூறப்படுகிறது.

அத்துடன் காற்றின் வேகமும் அதிகரித்து காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More