நேற்றைய சீரற்ற காலநிலை காரணமாக, அருகிலுருந்த மரம் முறிந்து வீழ்ந்தமையால், தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ்ப்பாண பணிமனைக் கட்டடம் சேதமடைந்துள்ளது.
இதனால் கலை இலக்கிய நண்பர்கள் பலரும் கவலை அடைந்துள்ளனர். இதேவேளை, “நான் வளர்ந்த வீடு, ஓடி விளையாடிய முற்றமும் நாற்சாரமும். இந்த வீடு 1928ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஏராளமான கதைகளை தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது. படை அரண், இராணுவ முகாம், விமானக் குண்டு வீச்சு என அனைத்தையும் தாண்டி வந்திருக்கிறது.” என கலை இலக்கிய ஆர்வலர் ஒருவர் கூறுகிறார்.