மஞ்சள் பயிர் செய்கையாளர்கள் தமது மஞ்சள் அறுவடையை உரிய காலத்திற்கு முன்னரே அறுவடை செய்யும் காரணத்தினால் எதிர்வரும் வருடத்தில் நாட்டில் ´விதை மஞ்சள் கிழங்கு´ பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டினுள் காணப்படும் மஞ்சள் பற்றாக்குறை மற்றும மஞ்சள் விலை ஏற்றம் காரணமாக விவசாய மக்கள் தமது மஞ்சள் அறுவடையை முதிர்ச்சியடையும் முன்பு அறுவடை செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த திணைக்களத்தின் அபிவிருத்தி பணிப்பாளர் உபுல் ரணவீர தெரிவித்தார்.
இதன் காரணமாக விவசாயிகளுக்கு மட்டுமன்றி தேசிய அளவிலும் நாட்டிற்கு பாரிய இழப்பு ஏற்படுவதாக உபுல் ரணவீர தெரிவித்திருந்தார்.