அநுராதபுரம் – பாதெனிய வீதியில் பஹலபலல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கெப் ரக வாகனமொன்று குறித்த இருவரையும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதடன், இதன்போது குறித்த கெப் ரக வாகனத்தில் 11 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் 8 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகன ஓட்டுனர் உட்பட மூவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.