Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுதந்திரதினம் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சுதந்திரதினம் குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

1 minutes read

இலங்கையின் 73 ஆவது சுதந்திரதினம் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை தேசிய கொடியை பறக்க விடுமாறு தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

சகல வீடுகள், வியாபார நிலையங்கள், அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், மற்றும் வாகனங்களில் இவ்வாறு தேசிய கொடியை பறக்க விடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச அலுவலகங்கள் அல்லது நிறுவனங்கள் அமைந்துள்ள சகல கட்டடங்களையும் பெப்ரவரி 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மின்விளக்குகளால் அலங்கரிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘செழிப்பான எதிர்க்காலம் : சௌபாக்கியமான நாடு’ என்ற தொனிப்பொருளில் பெப்ரவரி 4 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் சுதந்திர தின நிகழ்விற்கான கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More