0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 06, அரநாயக்க மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம் 660 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.