தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் கொவிட் – 19 தொற்றுக்குள்ளான சிலர் கண்டறியப்பட்டதன் காரணமாக அந்த அமைச்சு மூடப்பட்டிருப்பதாக உண்மைக்கு புறம்பான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் எவ்வித உண்மையும் இல்லை என்று தேசிய பாதுகாப்பு , உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சின் ஊழியர்களில் சிலர் கொவிட் – 19 தொற்றுக்குள்ளானமை இனங்காணப்பட்டதுடன் தொற்றுக்கு உள்ளானவர்கள் சுகாதார நடவடிக்கைகளுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அதே போன்று தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பைக் கொண்டிருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் ஏனைய ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுகாதார பாதுகாப்பு மூலோபாயங்கள் ஆகக் கூடிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் இதற்கமைவாக அமைச்சின் கடமைகள், அலுவல்கள் வழமை போன்று தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.