நாட்டில் கொரோனா வைரஸால் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.
வத்தளை பகுதியை சேர்ந்த 75 வயதான பெண் ஒருவர் கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் கடந்த 31ஆம் திகதி மரணித்தார்.
கொவிட்-19 நிமோனியாவுடன் மோசமடைந்த சிறுநீரக நோய் மற்றும் குருதி நஞ்சாதலால் ஏற்பட்ட அதிர்ச்சி நிலையே மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கொவிட்-19 நிமோனியா மற்றும் புற்று நோய் நிலைமையே மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு 02 பகுதியை சேர்ந்த 72 வயதான ஆண் கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் நேற்று முன்தினம் மரணித்தார்.
கொவிட்-19 நிமோனியாவுடன் மோசமடைந்த நுரையீரல் தொற்று மற்றும் இதய நோய் நிலைமையே மரணத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது நேற்று மரணித்தார்.
கொவிட்-19 தொற்றுடன் ஏற்பட்ட இதய நோய் நிலைமையே மரணித்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் பொலன்னறுவை பகுதியை சேர்ந்த 39 வயதான ஆண்ணொருவர் கடந்த 30 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்தார்.
கொவிட்-19 தொற்றுடன் குருதி நஞ்சாதலால் பல உறுப்புக்கள் செயலிழந்தமை, சுவாச அழற்சி நிமோனியா மற்றும் சிறுநீரக தொற்று நிலைமையே அவரது மரணித்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
மடவல பகுதியை சேர்ந்த 73 வயதுடைய பெண்ணொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணித்துள்ளார்.
கொவிட்-19 நிமோனியாவுடன் இதயம் செயலிழந்தமையே அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே கெலிஓயா பகுதியை சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவ்ர கொவிட்-19 தொற்று உறுதியான நிலையில் நேற்று மரணித்தார்.
கொவிட-19 நிமோனியா, குருதி நஞ்சாதல், மோசமடைந்த நீரழிவு மற்றும் சிறுநீரக நோய் நிலைமை காரணமாக அவர் மரணித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.